ஆப்நகரம்

10 பேர் சாப்பிட்டதற்கு ரூ.10 லட்சம் பில் கட்டினேன்: வருந்தும் பிரபல நடிகை!

நண்பர்கள் 10 பேருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றநடிகை ரகுல் பிரீத் சிங், சாப்பிட்டுவிட்டு ரூ. 10 லட்சம் பில் கட்டினேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Feb 2019, 10:28 pm
நண்பர்கள் 10 பேருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றநடிகை ரகுல் பிரீத் சிங், சாப்பிட்டுவிட்டு ரூ. 10 லட்சம் பில் கட்டினேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
Samayam Tamil Rakul Preet Singh


தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ . இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக தற்போது ‘தேவ்’ என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உட்பட 25க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ராகுல் சிங் அளித்த பேட்டி ஒன்றில், ‘ஒரு சமயம்எனது நண்பர்களுடன் லண்டனுக்கு சுற்றலா சென்றேன். சென்ற இடத்தில் நண்பர்கள் 10 பேருடன் உணவருந்த ஒரு ஓட்டலுக்குச் சென்றேன்.சாப்பிட்ட முடித்த பின் ரூ. 10 லட்சம் பில் என கூறினார்கள். இதனால் நான் அதிர்ந்து போனேன். பில்லை கட்டிவிட்டு பேசாமல் அங்கிருந்து வந்துவிட்டேன். இனி வாழ்க்கையில் அந்த ஹோட்டல் பக்கமே போகக்கூடாது என அப்பொழுதே முடிவுசெய்தேன்’’ என கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்