ஆப்நகரம்

குத்துப் பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்ட நடிகை தற்போது ஆட மறுப்பு!

நடிகை ரம்பா குத்துப் பாடலுக்கு நடனமாடுவதாக முன்னர் ஒப்புக் கொண்டு தற்போது ஆடமாட்டேன் என்று பின்வாங்கியுள்ளார்.

Samayam Tamil 2 Jun 2018, 3:38 pm
நடிகை ரம்பா குத்துப் பாடலுக்கு நடனமாடுவதாக முன்னர் ஒப்புக் கொண்டு தற்போது ஆடமாட்டேன் என்று பின்வாங்கியுள்ளார்.
Samayam Tamil rambha-1527142469-lb


நடிகைகளில் சிலர் திருமண ஆன பின்னரும் சினிமாவில் தற்போது ஜொலித்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக, நடிகைகள் சமந்தா, ஜோதிகா ஆகியோரை குறிப்பிடலாம். திருமணத்துக்கு பிறகும் இவர்கள் தங்கள் தங்களின் உடலை பராமரித்து ஸ்லிம்மாக வைத்துள்ளனர். இவர்களுக்கு முன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாக இருப்பவர் நடிகை ரம்பா.

ஆனாலும் இன்னும் தனது உடலை பராமரித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ரம்பா பின்னர் டி.வி. ஷோக்களில் பங்கேற்று வந்தார். மீண்டும் நடிக்க வந்த வாய்ப்புகளையும் ஏற்காமலிருந்தார். ரம்பாவின் நடனம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்பதால் அவரை நடன காட்சியிலாவது நடிக்க கேட்டனர்.

நீண்ட யோசனைக்கு பிறகு கடந்த சில மாதத்துக்கு முன் டோலிவுட்டில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்திருந்தார் நடிகை ரம்பா. அந்தப் பாடல் காட்சி படமாகாமலிருந்த நிலையில் தற்போது அந்த பாடலில் நடிக்க ரம்பா மறுத்திருக்கிறார். காரணம் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகப் போகிறார் நடிகை ரம்பா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்