ஆப்நகரம்

நடிகை ரம்பா கணவருடன் சேர்ந்து வாழ முடிவு

கணவரிடம் இருந்து விவாகரத்து கோரிய நடிகை ரம்பா, தற்போது மீண்டும் கணவர் இந்திர குமாருடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்.

TNN 5 Apr 2017, 3:42 pm
சென்னை: கணவரிடம் இருந்து விவாகரத்து கோரிய நடிகை ரம்பா, தற்போது மீண்டும் கணவர் இந்திர குமாருடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Samayam Tamil actress rambha filed decided to live with her husband
நடிகை ரம்பா கணவருடன் சேர்ந்து வாழ முடிவு


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரம்பா. கடந்த 2010ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரக் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ரம்பா, இந்திரனிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், குழந்தைகளை வளர்க்க சிரமப்படுவதாகவும், கணவரிடம் இருந்து மாதந்தோறும் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்க வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரம்பா-இந்திரகுமார் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்துள்ளனர். விரைவில் ரம்பாவின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்யப்படும் என கூறப்படுகிறது.

Actress Rambha filed decided to live with her husband. Before she approached Chennai family court to get divorce from her husband.

அடுத்த செய்தி

டிரெண்டிங்