ஆப்நகரம்

வெளியான அரை நிர்வாண புகைப்படம் : சர்ச்சையில் ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாணியணின் அரை நிர்வாண புகைப்படம் வெளியானதாக எழுந்த சர்ச்சைக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 14 Sep 2019, 11:30 am
'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை. அதன் பிறகு சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவை படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
Samayam Tamil EAfSvXWVAAEi3Jr


பட வாய்ப்புகள் வேண்டி சமீபத்தில் தனது மொட்டை மாடியில் சேலையில் ஒரு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். வைரலான அந்தப் புகைப்படங்களை தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் பெருகினர். மீடியாக்களிலும் அவரது பேட்டிகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், ரம்யா பாண்டியனின் வலைதளப் பக்கமாக கருதப்படும் பக்கத்தில் அவரது அரை நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பட வாய்ப்புக்காக இந்தளவு இறங்கிவிட்டாரே எனக் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ரம்யா பாண்டியன்



இந்த நிலையில் அந்த புகைப்படம் குறித்து ரம்யா பாண்டியன் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த அரை நிர்வாண புகைப்படம் என்னுடையது அல்ல, போலியானது அந்த சமூகவலைதள பக்கமும் போலியானது. என்னுடைய உண்மையான வலைதள பக்கம் இதுவே எனக்கூறி அவரது ஒரிஜினல் சமூக வலைதளப் பக்கத்தின் விபரங்களையும் தெரிவித்திருக்கிறார்.


நடிகர், நடிகைகளின் பெயரில் நிறைய போலியான சமூக வலைதளப் பக்கங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் வெளியிடப்படும் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களால் அவர்கள் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். இதனை தடுக்க சமூக வலைதள நிறுவனங்கள் போலி கணக்குகளை முடக்கி வந்தாலும் அவ்வப்போது இது மாதிரியான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் இப்போது ரம்யா பாண்டியனுக்கும் அந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்