ஆப்நகரம்

இப்படிலாம் பண்ணாதீங்க: ரசிகரிடம் வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா!

900கிலோ மீட்டர் பயணித்து தன்னை சந்திப்பதற்காக வந்து, சந்திக்க இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ரசிகரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Samayam Tamil 28 Jun 2021, 4:15 pm
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழி சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் தன்னுடைய ரசிகரிடம் வருத்தத்தை தெரிவித்த்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
Samayam Tamil Rashmika_Mandanna
Rashmika_Mandanna


இவரின் தீவிர ரசிகரான ஆகாஷ் திரிபாதி என்பவர், ராஷிகா மந்தனாவை நேரில் சந்திக்கும் ஆசையில் அவரின் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி தெலுங்கானாவில் இருந்துரஷ்மிகாவின் வீடு இருக்கும்கொடகு பகுதி, விராஜ்பேட்டுக்கு 900 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார். அதன்பின்னர் தெலுங்கானாவில் இருந்து மைசூருக்கு ரயிலில் வந்த ஆகாஷ், அங்கிருந்து ஆட்டோமூலம் முக்குலாவுக்குசென்றிருக்கிறார்.

குடகு மாவட்டம் வரை வந்த அவரால் ராஷ்மிகாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. பல்வேறு இடங்களில், அவரது வீட்டு விலாசம் கேட்டு விசாரித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிலர், இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷிடம் விசாரணை நடத்திய போலீசார்,ராஷ்மிகா ஊரில் இல்லாத தகவலையும், குட்பைஇந்தி படத்தில்நடிப்பதற்காக மும்பையில் இருக்கிறார் என்கிற விவரத்தை கூறி அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

கமலின் விக்ரம் படத்தில் இணைந்த கைதி பட நடிகர்: கனவு நனவானதாக பெருமிதம்!
இந்நிலையில் இது குறித்த தகவல் மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகை ராஷ்மிகாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது ரசிகரிடம், ட்விட்டர் வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், என்னை காண்பதற்காக வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். தயது செய்து இனி இது போல் செய்ய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், "நண்பர்களே, உங்களில் ஒருவர் நீண்ட தூரம் பயணித்து என்னைப் பார்க்க வீட்டிற்குச் சென்றார் என்ற தகவல் என் கவனத்திற்கு வந்தது. தயவு செய்து அப்படி எதுவும் செய்ய வேண்டாம். இந்த செயல் எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. நிச்சயம் ஒரு நாள், நான் ஒரு உங்களை சந்திப்பேன். அதுவரையில் உங்கள் அன்பை இணையத்தில் காட்டுங்கள். நான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்