ஆப்நகரம்

உணர்வுகளோடு பேசுவது பற்றி சிலருக்கு எப்படி பாடம் நடத்துவது? மோகன்லாலுக்கு ரேவதி கண்டனம்!

மீ டு பற்றி கருத்து தெரிவித்த மோகன்லாலுக்கு, பாலியல் கொடுமைகள் பற்றியும் அதை வெளியில் சொல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் எப்படி பாடம் நடத்துவது என நடிகை ரேவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Nov 2018, 2:05 pm
மலையாள நடிகர் சங்க தலைவராக இருக்கும் மோகன்லால், மீ டு இப்போது பேஷனாகி விட்டது என்று கூறியது திரையுலக பிரபலங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை ரேவதி தனது டுவீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
Samayam Tamil உணர்வுகளோடு பேசுவது பற்றி சிலருக்கு எப்படி பாடம் நடத்துவது? மோகன்லாலுக்கு ரேவதி கண்டனம்!
உணர்வுகளோடு பேசுவது பற்றி சிலருக்கு எப்படி பாடம் நடத்துவது? மோகன்லாலுக்கு ரேவதி கண்டனம்!


உணர்வுகளோடு பேசுவது பற்றி சிலருக்கு எப்படி பாடம் நடத்துவது? மீடூ இயக்கம் நீண்ட காலம் இருக்காது என்று பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.இது போன்றவர்களுக்கு எப்படி புரிய வைப்பது? இயக்குனர் அஞ்சலி மேனன் சொன்னதுபோல் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பாலியல் கொடுமைகள் பற்றியும் அதை வெளியில் சொல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் தெரியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே மோகன்லால் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ’மோகன்லால் சிறந்த நடிகர், சிறந்த மனிதர். அறிவுப்பூர்வமானவர். அவர் ஒரு வேளை இதுபற்றி யோசிக்காமல் சொல்லியிருக்கலாம். அவர் வேண்டுமென்றே சொன்னதாக நான் நம்பவில்லை. இருந்தாலும் #Metoo போன்றவை இன்னும் கவனமாக கையாளப் பட்டிருக்க வேண்டும். அவரைப் போன்றவர்களிடம் இருந்து சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது’ என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்