ஆப்நகரம்

வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையில் கால்பதித்த ருக்மணி

சினிமா வாய்ப்பு இல்லாததால் ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்த நடிகை ருக்மணி விஜயகுமார் தற்போது சின்னத்திரையில் கால்பதித்துள்ளார்.

Samayam Tamil 24 Jan 2019, 1:51 pm
நடிகர் அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நடிகை ருக்மணி விஜயகுமார். இந்தப் படத்தில் இவர் ஒரு ஆண் கேரக்டரில் நடித்திருப்பார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
Samayam Tamil rukmini-vijaykumar


இந்தப் படத்தை அடுத்து ருக்மணி ‘ஆனந்த தாண்டவம்’, ‘கோச்சடையான்’, ‘காற்று வெளியிடை’ ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இவர் பரத நாட்டியத்தில் திறமையானவர். ஆகையால் இவருக்கு பரத நாட்டியம் மீதுள்ள ஈடுபாட்டால் உலகம் முழுக்க நடன நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். தற்போதும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை ருக்மணி, பிரபல ஜெயா டிவியில் சூப்பர் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார் .

அடுத்த செய்தி

டிரெண்டிங்