ஆப்நகரம்

Sahana: அவ்ளோ மெல்லிய ரோப்பில் தூக்கிட முடியுமா? நடிகை மரணத்தில் பிடியை இறுக்கும் போலீஸ்.. தடயவியல்துறை ஆய்வு!

நடிகை சஹானா மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணையை நெருக்கியுள்ளனர்.

Samayam Tamil 16 May 2022, 5:11 pm
நடிகை சஹானா மரணம் தொடர்பாக போலீசார் விசரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
Samayam Tamil actress sahanas death forensic inspection at their residence
Sahana: அவ்ளோ மெல்லிய ரோப்பில் தூக்கிட முடியுமா? நடிகை மரணத்தில் பிடியை இறுக்கும் போலீஸ்.. தடயவியல்துறை ஆய்வு!



நடிகை மரணம்

நடிகையும் மாடலுமான சஹானா கடந்த 12 ஆம் தேதி இரவு வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். சஹானா வீட்டின் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவரான சஜ்ஜாத் தெரிவித்தார். ஆனால் சம்பவத்தன்று சஜ்ஜாத்தின் கூச்சலை கேட்டு வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர், சஹானா சஜ்ஜாத்தின் மடியில் எந்த அசைவும் இன்றி கிடந்ததாக கூறினர்.

சமந்தா ஸ்டைலில் திருமணம் செய்த விஜய் டிவி பிரபலம்... தீயாய் பரவும் போட்டோஸ்!

தற்கொலை அல்ல

இதையடுத்து சஹானாவின் உடலை கைப்பற்றிய போலீஸார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரது கணவர் சஜ்ஜாத்தை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சஹானாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலைதான் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மெல்லிய ரோப்

அதற்கு ஏற்றதுபோலவே அக்கம்பக்கத்தினரும் சஹானா மற்றும் சஜ்ஜாத் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறி வருகின்றனர்.இந்நிலையில் நடிகை சஹானா, தூக்கிட்டுக்கொண்டதாக சஜ்ஜாத் காட்டிய பிளாஸ்டிக் ரோப்பை பறிமுதல் செய்த தடயவியல் துறை அதிகாரிகள் அத்தனை மெல்லிய ரோப்பில் ஜன்னல் கம்பியில் மாட்டி தற்கொலை செய்து கொள்ள முடியுமா என விசாரித்து வருகின்றனர்.

நடிகை சஹானா மரணம்: இதுதான் நம் கடைசி போட்டோ என்று அறிந்திருக்கவில்லை... பிரபல நடிகர் உருக்கம்!

வீட்டில் ஆய்வு

சஹானா மற்றும் அவரது கணவர் தங்கியிருந்த வாடகை வீட்டிலும் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனிடையே சஜ்ஜாத் போதைக்கு அடிமையானவர் என்பதை உறுதி செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்த போதை மருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நடிகையாகும் நடிகர் ஜெயராமின் மகள்... கலக்கல் பிக்ஸ்!

போதைக்கு அடிமை

மேலும் சஜ்ஜாத் பயன்படுத்திய போதை பொருட்களின் தன்மை பற்றி தெரிந்து கொள்ளவும் தடயவியல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளவுள்ளனர். அதோடு அந்த வீட்டின் உரிமையாளரிடமும் இருவர் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சஹானாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க போலீசார் தங்களின் விசாரணையை அனைத்து வழிகளிலும் துரிதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எப்போவும் சண்டைதான்... அவங்க நல்லா வாழல.. பகீர் கிளப்பும் சஹானாவின் பக்கத்துவீட்டுக்காரர்கள்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்