ஆப்நகரம்

Sai pallavi : சம்பளத்தை குறைக்க முன்வந்துள்ள நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, தனக்கு பிடித்தமாதிரியான கதை இருந்தால் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Feb 2019, 4:05 pm
‘பிரேமம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் படத்திலேயே இவர் இந்தியா முழுவதும் பேசப்பட்டார். அதன்பிறகு மணிரத்னம் உட்பட பல முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடிக்க வந்த 10க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார். அதன் பிறகு 2 தமிழ் படங்களில் வந்த வாய்ப்பை முதலில் ஏற்றவர் பின்னர் கதையில் மாற்றம் செய்யப்பட்ட தால் விலகினார்.
Samayam Tamil sai-pallavi


ஒருவழியாக, விஜய் இயக்கிய ‘தியா’ படம் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார். தனுஷுடன், ‘மாரி 2’ படத்தில் ஜோடி போட்டு நடித்த சாய் பல்லவி தனது சூப்பர் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்ததுடன், ‘ரவுடி பேபி..’ பாடலுக்கு பிரபுதேவா அமைத்த நடன அசைவுகளை அச்சுபிசகாமல் வேகம் ஏற்றி ஆடி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

தெலுங்கில் சாய் பல்லவி நடித்த ஒரு படம் தோல்வி அடைந்தபோது அந்த தயாரிப்பாளர் தனக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை விட்டுக்கொடுத்தார். தற்போது புதிய முடிவு எடுத்திருக்கிறார். திறமையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான கதையுடன் தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்கு சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்க உள்ளாராம். இதற்கு அவர் விதிக்கும் ஒரே கண்டிஷன் ஸ்கிரிப்ட் தரமானதாகவும், அழுத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்