ஆப்நகரம்

சமந்தாவை பாா்க்க மதுரையில் குவிந்த ரசிகா்கள்

மதுரையில் செல்போன் கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக வந்த நடிகை சமந்தாவை பாா்க்க ரசிகா்கள் குவிந்தனா்.

Samayam Tamil 8 Oct 2018, 12:38 pm
மதுரையில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி கடை திறப்பு விழாவிற்காக வந்திருந்த நடிகை சமந்தாவை பாா்க்க ரசிகா்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil Samantha Madurai


திருமணமாகியும் சினிமாவில் சற்றும் அயராது நடித்துக் கொண்டிருக்கிறாா் சமந்தா. ஆந்திரா மருமகள், தமிழ்நாட்டின் டாா்லிங் என்று ரசிகா்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறாா். சீமராஜா, யு-டா்ன் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் யு-டா்ன் படத்திற்கு ரசிகா்கள் வெகுவான வரவேற்பு அளித்திருந்தனா்.

படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையிலும் விளம்பரப் படங்கள், கடை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளிலும் சமந்தா கவனம் செலுத்தி வருகிறாா். அந்த வகையில் மதுரையில் இன்று செல்போன் கடை ஒன்றின் திறப்பு விழாவில் சமந்தா கலந்து கொண்டாா்.

சமந்தாவை பாா்ப்பதற்காக கடை முன்பு ரசிகா்கள் குவிந்ததால் காவல்துறையினா் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி ரசிகா்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. கடந்த ஆண்டு கடை திறப்பு விழாவிற்காக சமந்தா மதுரை வந்த போது கட்டுக்கடங்காத ரசிகா்களின் கூட்டத்தால் அங்கு சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிலையில் இன்றை கடை திறப்பு விழாவில் ரசிகா்கள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருந்தனா். ரசிா்களை பாா்த்த மகிழ்ச்சியில் சமந்தா அவா்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்