ஆப்நகரம்

Samantha: நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை... சிகிச்சை முறையை மாற்றிய சமந்தா!

Samantha:மயோஸிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா சிகிச்சை முறையை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 28 Nov 2022, 5:33 pm
மயோஸிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா சிகிச்சை முறையை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil actress samantha changes her treatment
Samantha: நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை... சிகிச்சை முறையை மாற்றிய சமந்தா!


நடிகை சமந்தா

தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தார. இரு மொழிகளிலும் கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் சமந்தா. அதோடு இரு மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியானது. இந்தப் படத்தில் சமந்தாவின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. வசூலிலும் பட்டையை கிளப்பியது யசோதா திரைப்படம்.

காசுக்காக 'அந்த' வேலையை செய்த நயன்தாரா!

அடுத்தடுத்து சறுக்கல்கள்

சமந்தாவுக்கு சினிமாவில் ஏற்றம் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெரும் சறுக்கலை சந்தித்து வருகிறார். 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ மறைப்படி திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முறிந்து விட்டது. கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதை மறைக்கிறாரா மகாலட்சுமி?

அரிய நோய் பாதிப்பு

இதையடுத்து இருவரும் தங்களின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். விவாகரத்து முடிவுக்கு பிறகு பெரும் மன அழுத்தத்தில் இருந்ததாக நடிகை சமந்தா தெரிவித்தார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார் நடிகை சமந்தா. இந்நிலையில் மயோஸிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். இதனால் ஒரு சில நாட்கள் படுக்கையில் இருந்து எழக்கூட முடியாத அளவுக்கு அதிக வலி இருப்பதாக கூறியிருந்தார்.

பொண்டாட்டிய இப்படி சொல்லிட்டாரே ரவீந்தர்!

நடக்க முடியாத நிலை

அந்த வலியுடனே யசோதா படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் சமந்தா. இந்நிலையில் நடிகை சமந்தாவின் உடல் மேலும் மோசமடைந்ததாக தகவல் பரவி வருகிறது. நடக்க முடியாமல் அவதிப்படும் நடிகை சமந்தா ஹைத்ராபாத்தில் உள்ள அப்போல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சமந்தாவின் செய்தி தொடர்பாளர் அதனை மறுத்தார். சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பரவும் தகவலில் உண்மையில்லை என்றும் தற்போது படப்பிடிப்பு இல்லாததால் அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்றார்.

இதுக்குதான் அவரை திருமணம் செய்தாரா மகாலட்சுமி!

சிகிச்சை முறையில் மாற்றம்

ஆனால் நடிகை சமந்தாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியவில்லை என்றும் தகவல் வெளியானது. இதனைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமந்தா விரைவில் நலம் பெற வேண்டும் என வேண்டி வருகின்றனர். இந்நிலையில் சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆயுர்வேத சிகிச்சையால் சமந்தாவின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil 6: அடுத்த சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்.. ஹவுஸ்மேட்ஸுக்கு வந்த லெட்டர்!

எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்