ஆப்நகரம்

அவரே இல்லன்னு ஆகிருச்சு.. அப்புறம் இது எதுக்கு: பிரிவிற்கு பின் சமந்தா செய்த காரியம்..!

நாக சைதன்யா சம்பந்தப்பட்ட எந்த பொருளும் தன்னுடன் இருக்க வேண்டாம் என முடிவெடித்துள்ளார் நடிகை சமந்தா.

Samayam Tamil 7 Mar 2022, 6:15 pm
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
Samayam Tamil Samantha
Samantha


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அண்மையில் தங்களின் விவாகரத்தை அறிவித்தனர். அதன்பின்னர் சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
Beast: 'அரபிக் குத்து' பாடலை கேட்டு தளபதி என்ன சொல்லிருக்காரு பாருங்க..!
சமந்தா, நாக சைதன்யா இருவரும் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது சமந்தா அணிந்த புடவை நாக சைதன்யாவின் அம்மாவின் அம்மா பாட்டியின் திருமணப் புடவை. அந்தப் புடவையை ரூ.40 லட்சம் வரை செலவு செய்து புதுப்பித்து கொடுத்து அதை கட்டிக் கொள்ளும்படி நாக சைதன்யா சொன்னாராம்.

இந்நிலையில் தனது திருமண புடவையை நாக சைதன்யாவின் குடும்பத்தினரிடமே மீண்டும் கொடுத்துவிட்டாராம் சமந்தா. நாக சைதன்யா சம்பந்தப்பட்ட எந்த பொருளும் தன்னுடன் இருக்க வேண்டாம் என முடிவெடித்து அவர் இவ்வாறு செய்ததாக சமந்தாவின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்