ஆப்நகரம்

நூறு தடவை விழுந்து எழுந்தேன்.. நடிகை சமந்தா பெருமிதம்!

நடிகை சமந்தா பனிச்சறுக்கு விளையாடிய தனது அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 28 Jan 2022, 6:32 pm
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Samantha
Samantha


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் அண்மையில் மனம் ஒத்து பிரிவதாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர். பிரிவு முடிவிற்கு பின் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா.

அண்மையில் நடிகை சமந்தா கோவாவுக்கு சென்றிருந்தார். அங்கு பனிச்சறுக்கு விளையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தம்முடைய இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இணையத்தில் வைரலான சமந்தாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து, அவற்றுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் பனிச்சறுக்கு அனுபவம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் சமந்தா. அதில், “இந்த பயணத்தை நான் எப்படி தொடங்கினேன் தெரியுமா? ஒரு சறுக்கலில் ஒரு குழந்தையை விட்டால் எப்படி அது விளையாடுமோ. அப்படித்தான் இந்த பயணத்தை தொடங்கினேன். இருந்தாலும் மறுபடி மிகவும் பணிவாக தொடங்கிய இந்த பனிச்சறுக்கில் நான் ஒரு நூறு தடவை விழுந்து விட்டேன். அப்படி நூறு தடவை விழுந்தாலும், மீண்டும் மீண்டும் எழுந்தேன்.
தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு: ரஜினியின் ஆசை நிறைவேறுமா..?
ஒரு கட்டத்தில் விட்டுவிட்டு போய் விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் நான் அதை விடவில்லை. மீண்டும் மீண்டும் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தேன். இப்போது நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நல்ல வேளை, நான் அதை விட்டுவிடவில்லை. இதுபோன்ற ஒரு பொழுதுபோக்கை தொடங்கும்போது நாம் தொடக்கத்தில் பழகாமல் இருப்போம்.

ஒரு சைக்கிள் ஓட்டுவது போன்றதுதான். சைக்கிள் ஓட்டப் பழகும்போது விழுந்து விழுந்து எழுவோம். ஆனால் அதன்பிறகு மிகவும் இயல்பாக பழகிவிடும். அப்படி விழும்போது தான் கற்றுக் கொள்ளவும் முடியும் என்பது போல்தான் இதுவும். எதுவுமே தெரியாமல் நான் இந்த பயணத்தை தொடங்கினேன். ஆனால் இப்போது ஸ்பெஷலாக உணர்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

அடுத்த செய்தி

டிரெண்டிங்