ஆப்நகரம்

காதல் கணவரோடு வெளிநாட்டுக்கு டூர் கிளம்பிய நடிகை சமந்தா!

ஒரே மாதத்தில் மூன்று படங்களை முடித்த நடிகை சமந்தா, தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடன் வெளிநாட்டுக்கு டூர் கிளம்பியுள்ளார்.

Samayam Tamil 23 Mar 2018, 5:38 pm
ஒரே மாதத்தில் மூன்று படங்களை முடித்த நடிகை சமந்தா, தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடன் வெளிநாட்டுக்கு டூர் கிளம்பியுள்ளார்.
Samayam Tamil நடிகை சமந்தா


நடிகை சமந்தா கடைசியாக நடித்து வந்த படம் ‘நடிகையர் திலகம்’. நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநிதி‘ என்ற பெயரிலும் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கிவருகிறார்.

இந்தப் படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். மேலும், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, நாக சைதன்யா ஆகியோரும் நடிக்கின்றனர். சமந்தா, இந்தப் படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார். இவருடைய போர்ஷன் சமீபத்தில் முடிந்தது. இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சமந்தா. மே 9ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், கோடை விடுமுறைக்காக கணவருடன் வெளிநாடு டூர் கிளம்பிவிட்டார் சமந்தா. யாரும் இல்லாத, அதாவது மனித தொந்தரவு அதிகம் இல்லாத இடத்துக்கு இருவரும் டூர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்