ஆப்நகரம்

Sameera Reddy: மார்பகத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை: சூர்யா பட நடிகை பகீர் பேட்டி.!

நடிகை சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகம் பற்றி பகிர்ந்துள்ள தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 2 Feb 2023, 8:16 am
பாலிவுட் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மெய்னி தில் துஜ்கோ தியா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'வாரணம் ஆயிரம்' படத்தில் சூர்யா ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Samayam Tamil Sameera Reddy
Sameera Reddy


தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி, கடந்த 2014-ம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய சமீராவுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி பாலிவுட்டில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், படத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் ஒன்றில் கலந்து கொண்டபோது பாலிவுட் இயக்குநர் ஒருவர் தன்னை பார்வையால் துளைத்ததாகவும், சமீராவின் மார்பை அழகாகவும், பெரியதாகவும் காட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அந்த இயக்குநர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

Suriya 42: 'சூர்யா 42' படம் குறித்து தீயாய் பரவிய வதந்தி: படக்குழு அதிரடி விளக்கம்.!

ஆனால் அதற்கு சமீரா மறுப்பு தெரிவித்துள்ளார். மார்பை பெரியதாக காட்ட அறுவை சிகிச்சை செய்வதற்கு மறுத்தாலும், அதை பெரியதாக காட்ட சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் சமீரா. இருப்பினும் அறுவை சிகிச்சை செய்ய சொல்லி தான் வலியுறுத்தப்பட்டதாகவும், கடவுள் அருளால் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார் சமீரா.

Thalapathy 67: தளபதி 67-ல் 'கைதி' பட நடிகர்: லோகேஷ் வைத்துள்ள தரமான சஸ்பென்ஸ்.!

ஆனாலும் மார்பை பெரியதாக காட்ட தான் எடுத்த சிறு முயற்சிகளை கூட செய்யாமல் இருந்திருக்கலாம் என நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமீரா. பாலிவுட் சினிமா குறித்து நடிகை சமீரா பகிர்ந்துள்ள இந்த பகீர் குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்