ஆப்நகரம்

திறப்புவிழாவுக்கு வந்த நடிகை மயங்கி விழுந்தார்!

செல்போன் திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஷாலினி பாண்டே மயங்கி விழுந்துள்ளார்.

TNN 15 Sep 2017, 9:56 pm
செல்போன் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஷாலினி பாண்டே மயங்கி விழுந்துள்ளார்.
Samayam Tamil actress shalini pandey fainted when he came to an event
திறப்புவிழாவுக்கு வந்த நடிகை மயங்கி விழுந்தார்!


தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் நடிகை ஷாலினி பாண்டே. இந்தப் படத்தையடுத்து இவர் தமிழ் மற்றும் கன்னடத்தின் அதிக படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் ஷாலினி பாண்டே, ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு செல்போன் கடையை திறந்து வைக்கச் சென்றுள்ளார். நடிகை ஷாலினி வருவதை அறிந்த ஆயிரக் கணக்கான ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். ஏற்கெனவே சற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஷாலினி தன்னை பார்க்க வந்த கூட்டத்தை பார்த்து மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்த ஷாலினி. அதன் பிறகு திறப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு ஐதராபாத் திரும்பினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்