ஆப்நகரம்

நடிகையின் வீட்டை முற்றுகையிடும் கடன்காரர்கள்: கண்ணீருடன் கதறும் பிரபல நடிகை!

முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை சர்மிளாவின் வீட்டை கடன்காரர்கள் தினமும் முற்றுகையிடுவதாக அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Apr 2018, 5:48 pm
முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை சர்மிளாவின் வீட்டை கடன்காரர்கள் தினமும் முற்றுகையிடுவதாக அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
Samayam Tamil sharmila


தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்திருப்பவர் நடிகை சர்மிளா. கணவருடன் விவாகரத்து பெற்ற பின் மகனுடன் வசித்து வருகிறார். படங்களில் நடித்து சம்பாதித்த பணங்களை வீணாக செலவழித்து விட்டார். தற்போது தினமும் சாப்பாடுவதற்கே கஷ்டப்படுவதாக கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘படங்களில் நடித்து நிறைய சம்பாதித்தேன். தற்போது கையில் ஒன்றும் இல்லை. விவாகரத்திற்கு பிறகு தான் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டதாகவும், தன் மகனின் பள்ளி செலவுகளை நடிகர் சங்கம் மற்றும் விஷால் செய்து வருகிறார்கள். எனக்கென்று இருந்த வீடுகளை விற்றுவிட்டேன், இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பினால் கடன் கொடுத்தவர்கள் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்