ஆப்நகரம்

கம்பெனி சி.இ.ஓ.வாக மாறும் ‘நெடுஞ்சாலை’ நாயகி ஷிவதா நாயர்!

‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த ஷிவதா நாயர் ஒரு பெரிய கம்பெனியின் அதிரடி சிஇஓவாக நடிக்கவுள்ளார்.

TNN 8 Dec 2017, 4:18 pm
‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த ஷிவதா நாயர் ஒரு பெரிய கம்பெனியின் அதிரடி சிஇஓவாக நடிக்கவுள்ளார்.
Samayam Tamil actress shivada nair act as a company ceo
கம்பெனி சி.இ.ஓ.வாக மாறும் ‘நெடுஞ்சாலை’ நாயகி ஷிவதா நாயர்!


நடிகை ஷிவதா நாயர், தற்போது வெயிட்டான, தைரியமான கேரக்டர்கதள தேடிப்பிடித்து நடித்து வருகிறார். இந்த கேரக்டரில் ஷிவதா நடித்தா நன்றாக இருக்கும் என பெரும்பாலான மலையாள இயக்குனர்கள் விரும்புகிறார்கள்.

அந்தவகையில் மலையாளத்தில் ‘சூ சூ சுதி வாத்மீகம்‘, லக்ஷ்யம் ஆகிய படங்களில் தனது தைரியமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஷிவதா, தற்போது அதே போன்றதொரு வேடத்தில், குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக ‘சிகாரி சாம்பு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து, தற்போது உருவாக இருக்கும் ‘சாணக்ய தந்திரம்‘ படத்தில் ஒரு மிகப்பெரிய கம்பெனியின் சி.இ.ஓ ஆக, முக்கியமான முடிவுகளை அதிரடியாக எடுக்கும் துணிச்சல் மிகுந்த பெண் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் ஷிவதா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்