ஆப்நகரம்

போனிகபூரின் கடன் தொல்லையால் ஸ்ரீதேவி எடுத்த முடிவு: சித்தப்பா அதிர்ச்சி!

போனிகபூருக்கு அதிக கடன் தொல்லை இருந்ததால் தான் ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்ததாக அவருடைய சித்தப்பா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Feb 2018, 11:01 am
போனிகபூருக்கு அதிக கடன் தொல்லை இருந்ததால் தான் ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்ததாக அவருடைய சித்தப்பா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actress sridevi relative venugopal interview
போனிகபூரின் கடன் தொல்லையால் ஸ்ரீதேவி எடுத்த முடிவு: சித்தப்பா அதிர்ச்சி!


போனிகபூரை திருமணம் செய்த பின் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி, திடீரென இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து புலி, மாம் படங்களில் நடித்தார்.

இதற்கு அவரது கணவர் போனிகபூருக்கு இருந்த கடன் தொல்லையே காரணம் என ஸ்ரீதேவியின் சித்தப்பா வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

தவிர, ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனவும் எப்போதாவது மட்டும் மது அருந்துவதாக கேள்விப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மது அருந்தியதை நாங்கள் நேரில் பார்த்ததில்லை என அவரது சித்தப்பா கூறியுள்ளார். போனிகபூர் தயாரித்த சில படங்கள் நஷ்டத்தை
ஏற்படுத்தியதால் சென்னையில் உள்ள ஸ்ரீதேவிக்கு சொந்தமான சொத்துக்களை விற்றதாகாவும்,
கூறியுள்ளார். திருப்பதி வரும்போது எல்லாம் தங்கள் வீட்டிற்கு வந்து செல்லும் பழக்கம் உடையவர் ஸ்ரீதேவி,’ என அவரது சித்தப்பா வேணுகோபால் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்