ஆப்நகரம்

அதிரடி காட்சிகளில் டூப் போடாமல் நடித்த சுபிக்ஷா!

அதிரடி காட்சிகளில் டூப் போடாமல் நடித்த சுபிக்ஷா!

TOI Contributor 5 May 2017, 7:42 pm
‘நேத்ரா’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் சுபிக்ஷா அதிரடி காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார்.
Samayam Tamil actress subiksha performed stunt sequences without doop in nethra movie
அதிரடி காட்சிகளில் டூப் போடாமல் நடித்த சுபிக்ஷா!


நடிகை சுபிக்ஷா ‘கடுகு’ படத்திற்கு பிறகு தற்போது ‘வேட்டை நாய்’, ‘நேத்ரா’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏ.வெங்கடேஷ் இயக்கும் ‘நேத்ரா’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் சுபிக்ஷா. அவருக்கு ஆக்சன் காட்சியும் இப்படத்தில் உள்ளதாம். முக்கியமாக, சாப்ட்டான ரோலில் நடித்துள்ள அவர், ஒருகட்டத்தில் ஆவேசமாக பொங்கி எழுவாராம். அப்போது அதிரடியான காட்சிகளில் நடித்துள்ளாராம் சுபிக்ஷா.

அந்தவகையில், ஒரு காட்சியில் ஒரு வீட்டின் சுவரில் ஏறி ஜன்னல் வழியாக உள்ளே செல்லும் காட்சியில் நடித்தபோது ரோப்பில் தொங்கியபடி நடித்துள்ளார் சுபிக்ஷா. அந்த காட்சியில் டூப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று டைரக்டர் சொன்னபோது, ஆக்சன் காட்சிகளுக்கே டூப் இல்லாமல் நடிக்கும்போது இந்த மாதிரி காட்சிகளுக்கு எதற்காக டூப் நானே நடிக்கிறேன் என்று தைரியமாக ரோப்பில் தொங்கியபடி ரிஸ்க் எடுத்து நடித்தாராம் சுபிக்ஷா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்