ஆப்நகரம்

அஜித் கேட்ட கேள்வியால் அதிர்ச்சியடைந்த நடிகை!

அஜித்துடன் நடித்து மூன்று வருடங்களுக்குப் பின்னரும் ஞாபகம் வைத்திருந்து என் பசங்களின் படிப்பைப் பற்றி விசாரித்தார் என்று ‘கோலிசோடா’ படத்தில் ஆச்சியாக நடித்த பிரபல நடிகை சுஜாதா கூறியுள்ளார்.

Samayam Tamil 20 Nov 2018, 5:52 pm
நடிகர் அஜித், தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil சுஜாதா சிவகுமார்
சுஜாதா சிவகுமார்


சினிமாவையும் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ரிமோட் மூலம் விமானம் இயக்குவது என பல துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே ஓய்வு எடுக்க தனது குடும்பத்தினருடன் கோவா சென்றுள்ளார்.

இவருடன் ‘கோலிசோடா’ படத்தில் ஆச்சி கேரக்டரில் நடித்த நடிகை சுஜாதா சிவக்குமார் தற்போது விஸ்வாசம் படத்திலும் அஜித்துடன் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் பணியாற்றியதை பற்றி சுஜாதா பேட்டியளித்தார். அதில், ‘‘அஜித்துடன் இணைந்து நான் கடைசியாக நடித்த படம் ‘வீரம்’. அந்த படம் வெளிவந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது மூன்று வருடங்கள் கழித்து ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் என்னை அஜித் பார்த்தார். அப்போது, ஞாபகமாக எனது பசங்கள் குறித்து கேட்டார். ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்த பசங்க காலேஜ் போய்ட்டாங்களானு ஞாபகம் வைத்து மறக்காமல் கேட்கிறார். எப்படி அதையெல்லாம் அவர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டு போனேன்'' என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்