ஆப்நகரம்

கலகலப்பாக நடித்து வந்த என்னை கண்கலங்க வைத்துவிட்டார்: சுனைனா!

படங்களில் நான் கலகலப்பான கேரக்டரில் நடித்து வந்த என்னை இயக்குனர் சமுத்திரக்கனி கண்கலங்க வைக்கும் நடிகையாக்கி விட்டார் என்று கூறியுள்ளார் நடிகை சுனைனா.

TNN 7 Mar 2017, 4:20 pm
நடிகை சுனைனா, தமிழில் ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘வம்சம்’, ’நீர்ப்பறவை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் சுனைனாவுக்கு ரசிகர்களிடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
Samayam Tamil actress sunaina talk about director samuthirakani
கலகலப்பாக நடித்து வந்த என்னை கண்கலங்க வைத்துவிட்டார்: சுனைனா!


அதன்பிறகு சுனைனா நடித்த ‘வன்மம்’, ‘நம்பியார்’, ‘கவலை வேண்டாம்3 ஆகிய படங்களின் தோல்வி அவரால் மார்க்கெட்டில் நாயகியாக வலம் வரமுடியவில்லை. அதனால் தற்போது கதாநாயகி என்கிற வட்டத்தை விட்டு வெளியேறினார். தற்போது சமுத்திரக்கனி இயக்கியுள்ள ‘தொண்டன்’ படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்துள்ளார் நடிகை சுனைனா.

இந்த படம் பற்றி நடிகை சுனைனா கூறுகையில், ‘‘தொண்டன்’ படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்துள்ளேன். இதற்கு முன்பு கலகலப்பான வேடங்களில் நடித்த நான் இந்த படத்தில் கலங்க வைக்கும் நடிகையாக என் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

எமோசனல் காட்சிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி நடித்தேன். முக்கியமாக, எனக்குள் இருந்த இன்னொரு சுனைனாவை இந்த படத்தின் மூலம் வெளியே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்