ஆப்நகரம்

ரசிகர்கள் தொல்லை : விமானத்தை தவறவிட்ட நடிகை!

ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதால் விமானத்தை தவறவிட்டதாக நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.

TOI Contributor 18 Jun 2017, 1:12 pm
ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதால் விமானத்தை தவறவிட்டதாக நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.
Samayam Tamil actress tapsee missed her flight because of her fans
ரசிகர்கள் தொல்லை : விமானத்தை தவறவிட்ட நடிகை!


தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தனது முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களை பெற்ற டாப்ஸி அதன்பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துவந்தார். அதன் பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு வந்தது. அதனால் மும்பையிலேயே வீடு எடுத்து தங்கிவிட்டார். தற்போது பாலிவுட் சினிமாவின் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை டாப்ஸி!

மும்பையில் தங்கியிருப்பதால் தனது சொந்த ஊரான டெல்லிக்கு டாப்ஸி அவ்வப்போது சென்றுவருவது வழக்கம். தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை பார்க்க டெல்லி சென்றுவருவார். சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர், உறவினர்களை பார்த்துவிட்டு மும்பை திரும்ப டெல்லி விமான நிலையம் வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த ரசிகர்கள் டாப்ஸியை சுற்றி கூடிவிட்டனர். தங்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் நடிகை டாப்ஸி பொறுமையாக போஸ் கொடுத்துள்ளார். ஆனால் பின்னர் வாட்சை பார்க்கும் போது தான் நேரமானது தெரியவந்தது. செக்-இன் நேரம் முடிந்துவிட்டதால் டாப்ஸியால் புக் செய்த விமானத்தில் செல்ல முடியவில்லை. அதன்பின்னர் வேறு ஒரு விமானத்தில் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.

இது பற்றி பேசி டாப்ஸி, நான் வெளியிடங்களுக்கு செல்லும் போது போட்டோ எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அன்றைய தினம் அதிக அளவிளான குழந்தைகள் நான் நடித்த படங்கள் குறித்தும், கேரக்டர் குறித்தும் ஆழமாக பேசியதால் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டதில் நேரம் போனதே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்