ஆப்நகரம்

சுசி லீக்ஸ் குறித்து திரிஷாவின் மறைமுகமான கருத்து!

சுசி லீக்ஸ் குறித்து திரிஷாவின் மறைமுகமான கருத்து!

TOI Contributor 6 Mar 2017, 5:08 pm
பாடகி சுசித்ரா தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் சுசித்ராவோ நான் சமூக வலைதளத்திற்கு வருவதே இல்லை என்றும், யாரோ தனது அக்கவுண்ட்டை ஹேக் செய்துவிட்டனர் என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சசி லீக்ஸ் என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களில் ஆபாச புகைப்படங்கள் தொடர்ந்து பதிவேற்றப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா என்று பிரபலமான நடிகர்களின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன. அதில் தனுஷூம், திரிஷாவும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படமும் வெளியானது.
Samayam Tamil actress trishas tweet about suchi leaks
சுசி லீக்ஸ் குறித்து திரிஷாவின் மறைமுகமான கருத்து!


இது குறித்து நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் எழுப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில், “பழி வாங்க தேவையில்லை. அமைதியாக காத்திருக்கவும். உங்களை புண்படுத்துபவர்களுக்கு அதே போன்ற நிலை ஏற்படும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்களேயானால், அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு கொடுப்பார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Sundayvibes #epiphanymoment #smiles #Godbless 😇🤐😴 pic.twitter.com/5IhoJTykev — Trisha Krishnan (@trishtrashers) March 5, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்