90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அத்தியாகும் எண்ணிக்கையில் படங்கள் நடித்துள்ளார் அவர். 2002ல் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்துகொண்ட அவர் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்டார்.
அதன் பிறகு அரசியலில் களமிறங்கிய ரோஜா 2014 முதல் ஆந்திராவின் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். 2014 தேர்தல் வெற்றிக்கு பிறகு 2019லும் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவர். சென்ற வருடம் தேர்தல் முடிவுகள் வந்தபிறகு ரோஜாவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று அவரது தொண்டர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் அந்த பதவி அவருக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ரோஜா தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவுள்ள புஷ்பா என்ற படத்தில் தான் வில்லியாக ரோஜா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இயக்குனர் சுகுமார் சமீபத்தில் ரோஜாவுக்கு கதை கூறியதாகவும், அதில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் ரோஜா நடிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளி வரவில்லை.
அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் லாரி டிரைவராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் புஷ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போஸ்டரில் செம்மர கடத்தல் கும்பலை போலீஸ் பிடித்திருப்பது போல காட்டப்பட்டு இருந்தது. ஆந்திராவில் செம்மர கடத்தல் தொடர்பாக கைது மற்றும் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகம் நடந்து வரும் நிலையில் இந்த படம் எடுக்கப்படுகிறது.
புஷ்பா படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். மேலும் நெகடிவ் வேடத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சுனில் ஷெட்டி உள்ளிட்டவர்கள் கூறப்படுகிறது.
கொரோனா லாக் டவுன் காரணமாக அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நடைபெறாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. லாக் டவுன் முடிந்ததும் புஷ்பா பட ஷூட்டிங் துவங்கும் என தெரிகிறது. முதலில் ஒரு பிரம்மாண்ட சேஸ் காட்சியை படக்குழு எடுக்க உள்ளது. படத்தில் 6 நிமிடங்களுக்கு வரும் அந்த த்ரில்லிங் காட்சியை 6 கோடி ரூபாய் செலவிட்டு படமாக்க உள்ளனர்.கொரோனா லாக் டவுன் காரணமாக சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வரும் நிலையில் இந்த காட்சி படமாக்கும் பணிகளுக்கும் அதிகம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது. காரணம் இதில் முழுக்க முழுக்க இந்தியாவில் இருக்கும் சினிமா தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்தவுள்ளனர். வழக்கமாக வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற காட்சிகளை படமாக்க வரவைப்பார்கள். அதற்கு பதில் இங்கு இருக்கும் தொழிலாளர்களுக்கே முக்கியவம் தர உள்ளது புஷ்பா படக்குழு.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். தற்போதே அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்காகவே அனைத்து சினிமா துறைகளில் இருந்தும் முன்னணி நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைக்கின்றனர் என்றும் கூறலாம்.
அதன் பிறகு அரசியலில் களமிறங்கிய ரோஜா 2014 முதல் ஆந்திராவின் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். 2014 தேர்தல் வெற்றிக்கு பிறகு 2019லும் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவர். சென்ற வருடம் தேர்தல் முடிவுகள் வந்தபிறகு ரோஜாவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று அவரது தொண்டர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் அந்த பதவி அவருக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ரோஜா தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவுள்ள புஷ்பா என்ற படத்தில் தான் வில்லியாக ரோஜா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இயக்குனர் சுகுமார் சமீபத்தில் ரோஜாவுக்கு கதை கூறியதாகவும், அதில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் ரோஜா நடிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளி வரவில்லை.
அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் லாரி டிரைவராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் புஷ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போஸ்டரில் செம்மர கடத்தல் கும்பலை போலீஸ் பிடித்திருப்பது போல காட்டப்பட்டு இருந்தது. ஆந்திராவில் செம்மர கடத்தல் தொடர்பாக கைது மற்றும் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகம் நடந்து வரும் நிலையில் இந்த படம் எடுக்கப்படுகிறது.
புஷ்பா படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். மேலும் நெகடிவ் வேடத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சுனில் ஷெட்டி உள்ளிட்டவர்கள் கூறப்படுகிறது.
கொரோனா லாக் டவுன் காரணமாக அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நடைபெறாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. லாக் டவுன் முடிந்ததும் புஷ்பா பட ஷூட்டிங் துவங்கும் என தெரிகிறது. முதலில் ஒரு பிரம்மாண்ட சேஸ் காட்சியை படக்குழு எடுக்க உள்ளது. படத்தில் 6 நிமிடங்களுக்கு வரும் அந்த த்ரில்லிங் காட்சியை 6 கோடி ரூபாய் செலவிட்டு படமாக்க உள்ளனர்.கொரோனா லாக் டவுன் காரணமாக சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வரும் நிலையில் இந்த காட்சி படமாக்கும் பணிகளுக்கும் அதிகம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது. காரணம் இதில் முழுக்க முழுக்க இந்தியாவில் இருக்கும் சினிமா தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்தவுள்ளனர். வழக்கமாக வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற காட்சிகளை படமாக்க வரவைப்பார்கள். அதற்கு பதில் இங்கு இருக்கும் தொழிலாளர்களுக்கே முக்கியவம் தர உள்ளது புஷ்பா படக்குழு.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். தற்போதே அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்காகவே அனைத்து சினிமா துறைகளில் இருந்தும் முன்னணி நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைக்கின்றனர் என்றும் கூறலாம்.