ஆப்நகரம்

கணவரை விவாகரத்தா? விளக்கமளித்த வித்யா பாலன்!

நாங்கள் செல்பி எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் அல்ல என்றும் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக உலவி வரும் செய்தியையும் நடிகை வித்யா பாலன் மறுத்துள்ளார்

TOI Contributor 17 Nov 2016, 6:21 pm
நாங்கள் செல்பி எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் அல்ல என்றும் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக உலவி வரும் செய்தியையும் நடிகை வித்யா பாலன் மறுத்துள்ளார்
Samayam Tamil actress vidya balan clarified speculations about her marriage
கணவரை விவாகரத்தா? விளக்கமளித்த வித்யா பாலன்!


நடிகை வித்யா பாலன் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க்ஸ்மிதா நிஜ வாழ்க்கை படத்தில் நடித்து பிரபலமானவர். இந்தப் படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. ‘குரு’, ‘உருமி’ ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பயங்கரவாதி கணவனை கொலை செய்யும் கேரக்டரில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘கஹானி’ படம் தமிழில் நயன்தாரா நடித்து ‘அனாமிகா’ என்ற பெயரில் வெளிவந்தது.

2012ம் ஆண்டு நடிகை வித்யாபாலனுக்கும் தொழிலதிபர் சித்தார்த் ராய் கபூருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் காதல் திருமணம். தற்போது இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் இந்தி திரையுலகில் செய்திகள் பரவின.

இந்த விவாகரத்து வதந்திக்கு நடிகை வித்யாபாலன் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அதில் , “நானும் கணவர் சித்தார்த்தும் விவாகரத்து செய்யப் போவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதைக் கேட்டு எனக்கு கோபம் ஏற்படவில்லை. நான் சினிமாவில் நடிக்கும்போதே திருமணம் செய்து குடும்பத்தோடு செட்டிலாகிவிட்டேன். நாங்கள் இருவரும் மற்ற கணவன் மனைவிபோல் இல்லை. முக்கிய விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்வது இல்லை. டுவிட்டரில் போடுவதற்காக மற்ற ஜோடிகளைப் போல் ‘செல்பி’ எடுத்தது கிடையாது. இருவரும் கையைப் பிடித்துக் கொண்டும் மனைவி இடுப்பில் கைபோட்டுக் கொண்டும் நாங்கள் ரோட்டில் நடப்பதும் இல்லை. இந்த காரணத்திற்காகத்தான் நாங்கள் பிரியப்போகிறோம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதில் எதுவும் உண்மையில்லை. நாங்கள்சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார் வித்யா பாலன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்