ஆப்நகரம்

நடிகையைத் தொடர்ந்து இப்போ இவர் பாடலாசிரியர்

நடிகை, தயாரிப்பாளரைத் தொடர்ந்து தற்போது பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

TNN 25 Jun 2017, 5:06 pm
நடிகை, தயாரிப்பாளரைத் தொடர்ந்து தற்போது பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
Samayam Tamil actress vijayalakshmi turns lyricist
நடிகையைத் தொடர்ந்து இப்போ இவர் பாடலாசிரியர்


தமிழ் சினிமாவில் இயக்குனர் அகத்தியனின் மகள் என்ற அடையாளத்தோடு அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. அஞ்சாதே, சென்னை-600028 ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக அறியப்பட்டவர். அதன் பிறகு இவரது நடிப்பில் வந்த படங்கள் பெரும்பாலும் ஓடவில்லை. இந்நிலையில், உதவி இயக்குனரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் தன் கணவர் இயக்கத்தில் கிருஷ்ணா மற்றும் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் உருவாகும் பண்டிகை படத்தில் தயாரிப்பாளராக மாறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அடியே என்னும் தொடங்கும் பாடலை அவர் எழுதியுள்ளார்.

கவிதைகள் எழுதும் பழக்கம் கொண்டவர் விஜயலட்சுமி. இப்படத்திற்காக சில பாடலாசிரியர்களை அணுகினோம். ஆனால், அவர்கள் கொடுத்த பாடல்கள் எங்களுக்கு செட் ஆகவில்லை. இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி தானாக முன்வந்து பாடல் எழுதலாமா என்று கேட்டார், அதற்கு நானும் தடுக்கவில்லை. அவர் எழுதியிருந்த வரிகளை படித்து பிரமித்துவிட்டேன். இப்பாடலின் மூலம் மேலும், இப்படம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்று இயக்குனர் பெரோஸ் தெரிவித்துள்ளார்.

"Pandigai" starring Krishna and Anandhi, is being directed by debutant Feroz and the Music is done by R H Vikram. Intetesting trivia is that Vijayalakshmi has wrote the lyrics for one of the songs.

அடுத்த செய்தி

டிரெண்டிங்