ஆப்நகரம்

சிம்புவுடன் இருந்த பகையை முறித்துக் கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன்!

நடிகர் சிம்புவுடன் இருந்த பகை நீங்கி தற்போது அவரை வைத்து விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

Samayam Tamil 27 Apr 2018, 5:53 pm
நடிகர் சிம்புவுடன் இருந்த பகை நீங்கி தற்போது அவரை வைத்து விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
Samayam Tamil simbu-adhik


நடிகர் ஜி.வி. பிரகாஷை வைத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதையடுத்து நடிகர் சிம்புவை வைத்து ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் சிம்புவிற்கு 3 கெட்டப், ஹீரோயின்கள் என மாஸ் காட்டினார். படத்தில் இரு பாகமாகவும் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால் முதல் பாகமே படுதோல்வியடைந்தது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பில் சிம்பு சரியாக கலந்து கொள்ளவில்லை. அதன் பின் பல பஞ்சாயத்துகள் நடந்தது. இயக்குனர் ஆதியோடு, நடிகர் சிம்பு கோபமாக பேசும் செல்போன் உரையாடலும் இணையத்தில் வெளியானது.

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் ஜி.வி. பிரகாஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை ஆதிக் இயக்கி வருகிறார். மேலும், சிம்புவோடு ஏற்பட்ட பகை முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது இருவரும் அடிக்கடி பேசிக்கொள்கிறோம். அவருக்காக ஒரு கதை தயாராக இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்