ஆப்நகரம்

தனுஷ் இயக்கும் 2வது படத்திற்கான பணிகள் தொடங்கியது

பவா் பாண்டியை தொடா்ந்து நடிகா் தனுஷ் இயக்கவுள்ள புதிய படத்திற்கான பணிகள் வியாழன் கிழமை தொடங்கி உள்ளன.

Samayam Tamil 7 Sep 2018, 4:54 am
பவா் பாண்டியை தொடா்ந்து நடிகா் தனுஷ் இயக்கவுள்ள புதிய படத்திற்கான பணிகள் வியாழன் கிழமை தொடங்கி உள்ளன.
Samayam Tamil Dhanush 2


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் தனுஷ் பவா் பாண்டி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாா். இப்படம் ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்ற நிலையில் தனுஷ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், தனுஷ் வரலாற்று படம் ஒன்றை இயக்க உள்ளதாக பேசப்பட்டது. இருப்பினும் பொருளாதார பிரச்சினை காரணமாக இப்படம் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தனுஷ் இயக்கவுள்ள புதிய படத்திற்கான பணிகள் வியாழன் கிழமை நடைபெற்றது.


நாகாா்ஜூனா, எஸ்.ஜே.சூா்யா, சரத்குமாா், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்டோா் இப்படத்தில் நடிக்கின்றனா். படத்திற்கு பெயா் வைக்கப்படாத நிலையில் படத்திற்கு பூஜை மட்டும் போடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்