ஆப்நகரம்

கணவருடன் பொய்யான வாழ்க்கை வாழ விரும்பவில்லை: அதிதி!

பிடிக்காத கணவருடன் பொய்யான வாழ்க்கை வாழ விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகை அதிதி கூறியுள்ளார்.

TNN 27 Apr 2017, 5:28 pm
பிடிக்காத கணவருடன் பொய்யான வாழ்க்கை வாழ விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகை அதிதி கூறியுள்ளார்.
Samayam Tamil aditi rao hydaris new statement about personal life
கணவருடன் பொய்யான வாழ்க்கை வாழ விரும்பவில்லை: அதிதி!


இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை அதிதி. இவருக்கு 2009ம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், இவரது திருமண வாழ்க்கை மூன்று வருடங்கள்தான் நீடித்தது. பின்னர் 2013ல் சத்யதீப் மிஸ்ராவை நடிகை அதிதி விவாகரத்து செய்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கையாக மீண்டும் அவர் இந்தி படங்களில் நடிக்க துவங்கிவிட்டார் அதிதி.

இந்த சம்பவம் பற்றி யாராவது கேட்டால், மறுப்பு சொல்லாமல், ‘சத்யதீப் மிஸ்ராவை, திருமணம் செய்தது உண்மை தான்; பின், அவரை பிடிக்காததால், விவகாரத்து செய்தேன். பிடிக்காதவருடன், பொய்யான வாழ்க்கை வாழ எனக்கு விரும்பவில்லை.’’ என்றார் அதிதி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்