ஆப்நகரம்

திருப்பூர் ’சர்கார்’ திரையரங்கில் பரபரப்பு; ஊழியர்களை தாக்கிய அதிமுகவினர்!

திருப்பூர்: திரையரங்க ஊழியர்களை அதிமுகவினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Nov 2018, 3:31 pm
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு திரைக்கு வருவதற்கு முன்பாகவே, கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிக் கொண்டது. பின்னர் நீதிமன்றம் வரை சென்று சமரசம் செய்யப்பட்டது.
Samayam Tamil Sarkar Screening


இதையடுத்து திரைக்கு வந்த ’சர்கார்’ படம், மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டது. படத்தின் கதையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்கும் வகையிலும், பொதுமக்களை வன்முறைக்கு தூண்டும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக புகார் வந்தன. இதனால் ஆளும் அதிமுகவினர் ’சர்கார்’ திரையிட்ட திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் வலுத்ததால் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எஸ்.வி.ஆர் திரையரங்கில் ‘சர்கார்’ படம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அறிவிப்பை மீறி, சர்கார் படத்தை திரையிட்டதாக தகவல் வெளியானது.

உடனே அங்கு விரைந்த அதிமுகவினர், திரையரங்கு ஊழியர்களை கடுமையாக தாக்கினர். இதையடுத்து விரைந்த போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்