ஆப்நகரம்

இது என்னடா பிக் பாஸ் 3க்கு வந்த சோதனை: நிகழ்ச்சியை தணிக்கை செய்ய நோட்டீஸ்: சென்னை உயர்நீதிமன்றம்!

விஜய் தொலைக்காட்சியில் அரசியல் பிரமுகரும், நடிகருமான கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியை சென்சார் வாரியம் முதலில் தணிக்கை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 20 Jun 2019, 4:34 pm
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பாகாத நிலையில், நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதன் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil Kamla


பிக் பாஸ் சீசன் 1 மற்றும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெற்றிகரமாக விஜய் தொலைக்காட்சியில் வரும் 23ம் தேதி பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்க இருந்தது. இதனை கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்க இருந்தார். ஏற்கனவே இந்நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா மற்றும் பாடகர் மற்றும் நடிகரான மோகன் வைத்யா ஆகிய இருவரும் முதல் இரு போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து, பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் டிவி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சுதன் தொடர்ந்து இந்த வழக்கில் கூறியிருப்பதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஆபாசமாக ஆடை அணிவதாகவும், அவர்கள் பேசும் வார்த்தைகள் இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், இழிவான வார்த்தைகளையும் பேசுகிறார்கள்.

இது இளைஞர்களுக்கு பழகிப்போன ஒன்றாக இருந்தாலும் கூட, பெற்றோர்களும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஆதலால், இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்வதற்கு முன்னதாக முதலில் தணிக்கை செய்ய வேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்