ஆப்நகரம்

Vande Maatram: 15 வருடங்களுக்குப் பிறகு கணவர் படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்!

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு கணவர் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

Samayam Tamil 16 Oct 2019, 12:18 pm
பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிவகாமி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தன்பக்கம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இப்படத்தைத் தொடர்ந்து பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரங்களை பேசும் படங்களாக அமைந்தது.
Samayam Tamil Ramya Krishnan


இந்த நிலையில், இயக்குநர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இப்படத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ ஆஞ்சநேயம் என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. ஆனால், இதற்கு முன்னதாக 2003 ஆம் ஆண்டு ரம்யா கிருஷ்ணன் – வம்சி கிருஷ்ணா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கணவர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் நடித்த முதல் படமாக ஸ்ரீ ஆஞ்சநேயம் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது 15 வருடங்களுக்குப் பிறகு கணவர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கு வந்தே மாதரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், பிரகாஷ் ராஜ், அவிகா கோர் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்