ஆப்நகரம்

ரெண்டு பீருக்கு மேல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது: ஜெய் ஒப்புதல் வாக்குமூலம்!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவின் போது ரெண்டு பீருக்கு மேல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என்று நடிகர் ஜெய் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 27 Jun 2019, 5:06 pm
எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் ஜெய், அதுல்யா, வைபவி நடிக்க புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. சமீப காலங்களில் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த எஸ் ஏ சந்திரசேகர் இப்படத்தை தனது கடைசிப்படமாக உருவாக்கி வருகிறார். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் நடிகர் ஜெய்யின் 25ஆவது படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Kemari


இப்படத்தின் பெயர் அறிவிப்பு விழா நடந்தது. இப்படத்திற்கு கேப்மாரி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இக்கால இளைஞர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தினை பற்றி பேசிய நடிகர் ஜெய் இப்படத்தின் கதையை இயக்குநர் முதன் முதலில் என்னிடம் சொன்னபோதி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் வாழ்க்கையை யாரோ கேமராவை ஒலித்து வைத்து எடுத்தது போல் இருந்தது. சாரிடம் இது எப்படி எனக் கேட்டேன். படத்தில் ஒரு டயலாக் வரும் இரண்டு பீருக்கு மேல நான் என்ன செய்யரேன்னு எனக்கே தெரியாது. இந்த மாதிரி நிறைய டயலாக், நிறைய காட்சிகள் படத்தில் இருக்கு.

எல்லாமே என் வாழ்க்கையில் நடந்த மாதிரி இருக்கிறது. அதற்காக இதில் வருவதையெல்லாம் நான் செய்திருக்கிறேனா எனக் கேட்காதீர்கள் என்றார். இந்தப்படம் மிகப்பெரிய அனுபவம். வெங்கட்பிரபு படத்தை விட இந்தப்படத்தில் நான் ஜாலியாக இருந்தேன் என்றார். இப்படம் தீவிரமான படப்பிடிப்பில் இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்