ஆப்நகரம்

டி.கே. ராஜீவ்குமார் இயக்கத்தில் மீண்டும் இணையும் நித்யா மேனன்!

இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் நடிகை நித்யா மேனன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நடிக்கிறார்.

Samayam Tamil 26 Oct 2018, 4:18 pm
பிரபல இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் நடிகர்கள் கமலையும் ஜெயராமையும் வைத்து ‘சாணக்யன்’ என்ற படத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பே இயக்கியிருந்தார். மேலும் நடிகர் கமலின் ‘சபாஷ் நாயுடு’ படத்தை டி.கே.ராஜீவ்குமார்தான் முதலில் இயக்கி வந்தார். பிடப்பிடிப்பின் போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்தப்படத்தில் இருந்து விலகினார்.
Samayam Tamil nithya-menon


இந்தநிலையில் தற்போது இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் மலையாளத்தில் ‘கோலாம்பி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். இதற்கு முன் 2011ல் இவர் இயக்கிய ‘தல்சமயம் ஒரு பெண்குட்டி’ என்கிற படத்திலும் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இவரது இயக்கத்தில் இணைந்துள்ளார் நடிகை நித்யா மேனன்.

நித்யா மேனன், தற்போது நடித்து முடித்துள்ள ‘பிராண’ என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்