ஆப்நகரம்

பல வருடங்கள் கழித்து மீண்டும் வருகிறார் பெண் இயக்குனர் ஜெயதேவி!

பெண் இயக்குனர் ஜெயதேவி பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

Samayam Tamil 8 Feb 2018, 5:07 pm
பெண் இயக்குனர் ஜெயதேவி பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
Samayam Tamil after a long time woman director jayadevi again ready to direction
பல வருடங்கள் கழித்து மீண்டும் வருகிறார் பெண் இயக்குனர் ஜெயதேவி!


‘நலம் நலமறிய ஆவல்’, ‘பாசம் ஒரு வேஷம்’, ‘விலங்கு’, ‘விலாங்கு மீன்’ உள்பட பல படங்களை இயக்கிவர் பிரபல பெண் இயக்குனர் ஜெயதேவி. மேலும் இவர் வேலு பிரபாகரனின் ‘புரட்சிக்காரன்’ என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் நடிகை குஷ்பு வைத்து ‘பவர் ஆப் உமன்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. சில காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இயக்குனர் ஜெயதேவி இப்போது மீண்டும் படம் இயக்குகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நல்ல படங்கள் இயக்கி நல்ல இயக்குனர் என்று பெயர் வாங்கினேன். ஆனாலும் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாய்ப்புக்காக போராடி ஓய்ந்து விட்டேன். சொந்தமாக சில படங்கள் தயாரித்தேன். பெண்களை உயர்த்தி பிடிக்கும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் ஒன்றை இயக்க இருக்கிறேன். பெரிய ஹீரோயின் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரும்’’ என்றார் ஜெயதேவி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்