ஆப்நகரம்

ரஜினிக்கு அடுத்து இரண்டு படங்கள் ரெடி... இயக்குனர்கள் யார் தெரியுமா?

ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து எச். வினோத், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோரின் படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 12 Apr 2019, 11:57 am
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போர் வரும் போது பார்க்கலாம் என தன் அரசியல் வருகை குறித்து சொல்லிவிட்டு படத்தில் நடிக்க கிளம்பிய நிலையில், வரிசையாக படு வேகமாக படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.
Samayam Tamil Rajini (3)


அந்த வகையில் 2.0 ரிலீஸ் ஆன சில மாதத்தில் பேட்ட ரிலீஸ் ஆனது, தற்போது ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ என பெயரிடப்பட்ட படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியது.

2 படங்கள்?
இந்நிலையில் தர்பார் போஸ்டர் ரிலீஸ் ஆன அன்றே கே.எஸ் ரவிக்குமார் ரஜினியின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதனால் அவருடன் படம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

முத்து, படையப்பா போன்ற ஹிட் படங்கள் இவர்கள் கூட்டணியில் உருவானது. ஆனால் லிங்கா படம் அவ்வளவாக ஹிட் ஆகாததால் அடுத்து இவர்கள் கூட்டணியில் படங்கள் வெளியாகவில்லை.

தற்போது இவர்களின் சந்திப்பிற்கு பிறகு புதிய படம் உருவாக உள்ளதாக தெரிகிறது.
அதே சமயம் தற்போது அஜித்தை வைத்து இந்தியில் வெளியான பிங்க் பட ரீமேக் ‘நேர் கொண்டபார்வை’ படத்தை எச்.வினோத் இயக்கி வருகின்றார்.

தர்பார் படத்திற்கு பிறகு எச். வினோத், ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்