ஆப்நகரம்

இனிமேல் யாரும் வரக்கூடாது: செல்போனும் பயன்படுத்தக்கூடாது: தர்பார் படக்குழு அதிரடி!

தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானதைத் தொடர்ந்து படக்குழுவினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 30 Apr 2019, 1:12 pm
தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானதைத் தொடர்ந்து படக்குழுவினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Samayam Tamil nayanthara


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினியுடன் இணைந்து யோகி பாபு, நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதீக் பாப்பர் ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 3 மாதம் மும்பையை சுற்றிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

கடந்த 10ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பேட்ட படத்தைத் தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பார் – 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதையில் ரஜினி!



இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய உடன் ஒவ்வொரு நாளும், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக்கானது. தொடர்ந்து மருத்துவமனை காட்சி, கிரிக்கெட் விளையாடுவது போன்றவை சமூக வலைதளங்களில் லீக்கானது. இது தயாரிப்பு தரப்பினருக்கும், இயக்குனருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதனை தடுக்கும் வகையில், இது குறித்து ஆலோசனை நடத்திய படக்குழுவினர் பார்வையாளர்களுக்கு தடை விதித்துள்ளனர். மேலும், படப்பிடிப்பு நடக்கும் இடத்தை சுற்றிலும் தனியார் பாதுகாவலர்களை நிறுத்தியுள்ளனர். அருகிலுள்ள காவல் நிலையத்தில் மனு அளித்து அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பையும் பெற்றுள்ளனர். படத்தில் நடிக்கும் துணை நடிகர் – நடிகைகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர்.

இதன் காரணமாக கடந்த சில தினங்களாக தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்