ஆப்நகரம்

இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின் கேரளாவில் வெளியான முதல் படம் ‘ரணம்’!

வெள்ளத்தால் சேதமடைந்த கேரளாவில் இயல்பு வாழ்க்கை திரும்பிய பின் முதற் படமாக ‘ரணம்’ என்ற படம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Sep 2018, 4:36 pm
வெள்ளத்தால் சேதமடைந்த கேரளாவில் இயல்பு வாழ்க்கை திரும்பிய பின் முதற் படமாக ‘ரணம்’ என்ற படம் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ranam


கடந்த மாதம் கேரளாவில் கடும மழை பெய்து வெள்ளத்தால் அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. இதன் காரணமாக மலையாள திரையுலகில் கடந்த 25 நாட்களில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.

இந்தநிலையில் தற்போது கேரளாவில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆகையால் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணம்’ படம் நேற்று வெளியானது. இந்தப்படத்தில் இஷா தல்வார் கதாநாயாகியாக நடித்துள்ளார். வில்லனாக நடிகர் ரகுமான் நடித்துள்ளார். இந்தப் படத்தை நிர்மல் சஹாதேவ் என்பவர் இயக்கியுள்ளார். .

நீண்ட நாட்கள் கழித்து பிருத்விராஜ் நடித்துள்ள ஆக்சன் த்ரில்லராக ‘ரணம்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் முற்றிலும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படமாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்