தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திர சிம்மாசனத்தில் இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். நடிப்பு, ஸ்டைல், பேச்சு, ஆன்மீகம் என்று எல்லாவற்றிலும் ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்றுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்மீக அரசியல் பற்றி அறிவிப்பு வெளியிட்டார். அதோடு, சரி அறிவிப்பு அறிவிப்பாகவே சென்று விட்டது. அவர் அறிவிப்பு வெளியிட்ட இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. எப்போது தான் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அனைவருக்கும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு என்னவோ 2016 என்று தான் தெரிந்திருக்கும். உண்மையில், கடந்த 1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட போது, அக்கட்சிக்கு ரஜினி தேவைப்பட்டுள்ளார். அப்போது ரஜினி அண்ணாமலை படத்தில் பயன்படுத்திய சைக்கிள் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சைக்கிள் ரஜினி தனது வீட்டு வேலைக்காரனுக்கு கொடுக்கவே, அக்கட்சிக்கு தனது சைக்கிளை தர மறுத்து விட்டாராம்.
1996:
1996ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் உள்ள ரஜினியின் ரசிகர்கள் அரசியலில் நுழைவதற்கு குறிப்பாக மாநில முதல்வர் பதவிக்கு போட்டியிட அழைப்பு விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரஜினியோ 2017ல் தான் தனது அரசியல் அறிவிப்பை வெளிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் இன்று வெளியான கோமாளி படத்தின் டிரைலர் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த டிரைலரின் இறுதியில் ஜெயம் ரவி, இது எந்த வருசம் என்று கேட்க, அதற்கு 2016ம் என்று யோகி பாபு கூறுகிறார்.
அதோடு, ரஜினி தனது ஆன்மீக அரசியல் குறித்து பேசுவது போன்று டிவியில் காட்டப்படுகிறது. இதனைக் கண்ட ஜெயம் ரவி, இல்லை இல்லை இது 1996ம் ஆண்டுக்குரியது. யாரை ஏமாத்துறீங்க என்று கேள்வி எழுப்புகிறார். அதுவரை ஜெயம் ரவி கிட்டத்தட்ட 16 வருடங்களாக கோமாவில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இன்று நடந்த கோமாளி இசை வெளியீட்டு விழாவின் போது ஏன், ரஜினியின் அரசியல் குறித்த கருத்து டிரைலரில் இடம்பெற்றிருந்தது என்பற்கான காரணத்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகிய இருவருமே வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். அவர் அரசியலுக்கு வருவது தான் எங்களது ஆசை. அதனை குறிப்பிடும் வகையில் தான் டிரைலரின் ரஜினியின் அரசியல் கருத்து குறித்து இடம்பெற்றிருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இதனை கண்டுகொள்ளாத ரஜினி ரசிகர்கள் நாளைய தமிழகம் ரஜினி (#நாளைய_தமிழகம்_ரஜினி) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
ஆனால், அனைவருக்கும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு என்னவோ 2016 என்று தான் தெரிந்திருக்கும். உண்மையில், கடந்த 1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட போது, அக்கட்சிக்கு ரஜினி தேவைப்பட்டுள்ளார். அப்போது ரஜினி அண்ணாமலை படத்தில் பயன்படுத்திய சைக்கிள் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சைக்கிள் ரஜினி தனது வீட்டு வேலைக்காரனுக்கு கொடுக்கவே, அக்கட்சிக்கு தனது சைக்கிளை தர மறுத்து விட்டாராம்.
1996:
- திமுக புதிதாக உருவான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ரஜினி தேவைப்பட்டார்.
- ஜெயலலிதா ஆட்சியினை அப்புறப்படுத்த எதிர்கட்சிகளுக்கு ரஜினி தேவைப்பட்டார்.
- ரஜினி பெயரை சொல்லி வாக்கு கேட்டு வென்றனர்.
1996ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் உள்ள ரஜினியின் ரசிகர்கள் அரசியலில் நுழைவதற்கு குறிப்பாக மாநில முதல்வர் பதவிக்கு போட்டியிட அழைப்பு விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரஜினியோ 2017ல் தான் தனது அரசியல் அறிவிப்பை வெளிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் இன்று வெளியான கோமாளி படத்தின் டிரைலர் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த டிரைலரின் இறுதியில் ஜெயம் ரவி, இது எந்த வருசம் என்று கேட்க, அதற்கு 2016ம் என்று யோகி பாபு கூறுகிறார்.
அதோடு, ரஜினி தனது ஆன்மீக அரசியல் குறித்து பேசுவது போன்று டிவியில் காட்டப்படுகிறது. இதனைக் கண்ட ஜெயம் ரவி, இல்லை இல்லை இது 1996ம் ஆண்டுக்குரியது. யாரை ஏமாத்துறீங்க என்று கேள்வி எழுப்புகிறார். அதுவரை ஜெயம் ரவி கிட்டத்தட்ட 16 வருடங்களாக கோமாவில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இன்று நடந்த கோமாளி இசை வெளியீட்டு விழாவின் போது ஏன், ரஜினியின் அரசியல் குறித்த கருத்து டிரைலரில் இடம்பெற்றிருந்தது என்பற்கான காரணத்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகிய இருவருமே வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். அவர் அரசியலுக்கு வருவது தான் எங்களது ஆசை. அதனை குறிப்பிடும் வகையில் தான் டிரைலரின் ரஜினியின் அரசியல் கருத்து குறித்து இடம்பெற்றிருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இதனை கண்டுகொள்ளாத ரஜினி ரசிகர்கள் நாளைய தமிழகம் ரஜினி (#நாளைய_தமிழகம்_ரஜினி) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.