ஆப்நகரம்

16ஆவது வருடத்தில் 25ஆவது படம்: கலக்கும் ஜெயம் ரவி!

சினிமாவில் கால்பதித்து 16 வருடங்கள் ஆன நிலையில், ஜெயம் ரவி அடுத்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 21 Jun 2019, 3:02 pm
ஜெயம் ரவி தமிழ் சினிமா கதாநாயகர்களில் முக்கியமானவர். ஜெயம் படம் மூலம் அறிமுகமான அவர் தொடர்ச்சியாக் பல வெற்றிப்படங்களை தந்ததன் மூலம் முன்னனி நடிகராக வலம் வருகிறார்.
Samayam Tamil j1.


தொடர்ச்சியாக வித்தியாசமான வேடங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுள்ளவர். குத்துச்சண்டை வீரராக பூலோகம், போலிஸாக தனி ஒருவன், விண்வெளி வீரராக டிக்,டிக்,டிக் என ஒவ்வொரு படத்திற்கும் நிறைய வித்தியாசங்களை செய்பவர்.

இவர் சினிமாவுக்கு அறிமுகமாகி 16 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். தற்போது கோமாளி படத்தில் வித்தியாசமான வேடமொன்றில் நடித்து வரும் ஜெயம் ரவி தன் 25 வது படமாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இயக்குநர் லக்‌ஷ்மணனுடன் இணைந்துள்ளார். இதற்கு முன் லக்‌ஷமணனுடன் இணைந்து ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் நடித்துள்ளார். லக்‌ஷமணனுடன் மூன்றாவது முறையாக இணையும் இப்படம் மிகப்பிரமாண்டமான முறையில் தயாராக உள்ளது.



ஜெஆர்25 எனும் பெயரிடப்படாத இப்படத்தில் நிதி அகர்வால் நாயகியாக நடிக்க உள்ளார். இவர்களுடன் சரண்யா, தம்பி ராமையா, சதீஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இமான் இசையமைக்க டட்லி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிகிறார். நேற்று பூஜையுடன் ஜெயம் ரவிவின் 16 ஆம் ஆண்டில் இப்படம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்