ஆப்நகரம்

பூஜையுடன் தொடங்கிய ஜோதிகாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள காற்றின் மொழி படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அவர் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.

Samayam Tamil 14 Nov 2018, 4:11 pm
ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள காற்றின் மொழி படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அவர் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.
Samayam Tamil jyo


ஜோதிகா தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘காற்றின் மொழி’. இந்தப் படத்தை ‘மொழி’ படத்தை இயக்கிய ராதாமோகன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜோதிகா சோலோ ஹீரோயினியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை, ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’ என்ற படங்களின் மூலமாக குடும்ப பார்வையாளர்களை ஈர்த்தவர். இவர் நடிப்பில் தற்போது ‘காற்றின் மொழி’ என்ற படம் வெளியாகவிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதன் டிரைலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்தப் படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் வித்தார்த் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சிம்புவை தொடர்ந்து காமெடி நடிகரான யோகி பாபுவும் இப்படத்தில் நடித்துள்ளார்.

காற்றின் மொழி படமானது ஜோதிகாவின் பிறந்தநாளான அக்டோபர் 18ம் தேதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அப்போது வடசென்னை, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் திரைக்கு வந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், வரும் 16ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா அடுத்த படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர். பிரகாஷ் பிரபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வாரம் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. சென்னையில், கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் செலவில் பள்ளிக்கூடம் போன்று செட் அமைக்கப்பட்டுள்ளது.

ஜோதிகாவுடன் இணைந்து பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரீஷ் பேரடி, கவிதா பாரதி உள்பட பலர் நடிக்கின்றனர். சீன் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்