ஆப்நகரம்

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி?

கைதி படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ராஜு முருகன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 23 Oct 2019, 6:53 am
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படம் வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஸ்டோரியை மையப்படுத்திய இப்படத்தில் எந்த ஹீரோயினும் நடிக்கவில்லை. ஆதலால், இப்படத்தில் டூயட் பாடல் எதுவும் இல்லை.
Samayam Tamil Karthi


இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கப் போவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

வாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு!

இதற்கிடையில், ராஜு முருகன், ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் பிஸியாக இருப்பதால், இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த பிறகு அடுத்த படம் குறித்து அறிவிப்பை ராஜு முருகன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் ஜிப்ஸி படத்தில், நடாஷா சிங், லால் ஜோஸ், சன்னி வெயின், சுஷீலா ராமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரிய திரையில் ரிலீசாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்ற பிகில்!

இதே போன்றும் கார்த்தியும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் ஜோதிகா, கார்த்திக்கு அக்காவாக நடிக்கிறார். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் நிவேதா பெத்துராஜ்!

இன்னும் 2 நாட்களில் கைதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு பிகில் படத்தை விட குறைவான திரையரங்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. விருமாண்டி மற்றும் டை ஹார்டு ஆகிய படங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

இவர், தற்போது விஜய்யின் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்