ஆப்நகரம்

Pinarayi Vijayan: கமலை தொடர்ந்து கேரளா முதல்வருக்கு விஜய் சேதுபதி புகழாரம் : ஏன் தெரியுமா?

நடிகர் கமலை தொடர்ந்து கேரளா முதல்வர் பினராயி விஜயனை நடிகர் விஜய் சேதுபதி பாராடி புகழ்ந்துள்ளார்.

Samayam Tamil 29 Nov 2018, 6:11 pm
சென்னை : நடிகர் கமலை தொடர்ந்து கேரளா முதல்வர் பினராயி விஜயனை நடிகர் விஜய் சேதுபதி பாராடி புகழ்ந்துள்ளார்.
Samayam Tamil kamal vijay sethupathi


கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 கோடியை வழங்கிய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் தாக்குதலால் நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. கஜா புயல் காரணமாக இதுவரை 63 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பல குடிசைகளும், மரங்களும் சேதமடைந்துள்ளன.

டெல்டா மக்களுக்கு உதவும் பொருட்டு பொதுமக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். பலர் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். பல சமூக ஆர்வளர்கள் நிதியை திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் தமிழகத்திற்கு கேரளா மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன் எதிரொலியாக கேரள மாநில அரசு கஜா புயல் பாதித்த தமிழகத்திற்கு ரூ.10 கோடி நிவாரண உதவி அறிவித்துள்ளது.

இதையடுத்து கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு ரூபாய் 10 கோடியை அளித்துள்ளதற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகர் கமல் நன்றி தெரிவித்துள்ளார். அதோடு வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு! என கமல் புகழ்ந்துள்ளார்.



விஜய் சேதுபதி புகழாரம் :
கமலைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, “புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்...” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்