ஆப்நகரம்

மீண்டும் போலீஸாக அருண் விஜய்!

தமிழில் வெற்றிக்கு போராடி சமீப காலமாக தேர்ந்தெடுத்த படங்கள் மூலம் நல்ல பெயரையும் வெற்றியையும் பெற்று வரும் அருண் விஜய் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் த்ரில்லர் கதையில் போலீஸ் வேடமேற்கிறார்.

Samayam Tamil 7 Sep 2019, 5:05 pm
அஜித், விஜய் அறிமுகமான காலகட்டத்தில் அறிமுகமானாலும் வெற்றிக்காக பல காலம் போராடியவர் அருண் விஜய். தடையற தாக்க படம் இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன் பிறகு தன் படங்களை வெகு கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
Samayam Tamil arun vijay police


அஜித்தின் என்னை அறிந்தால் வில்லன் பாத்திரத்தில் விக்டராக நடிக்க அந்தப்பாத்திரம் தமிழ்நாடு முழுதும் மிகப்பெரிய ஆதரவை பெற்றுத் தந்தது. இதன் பிறகு குற்றம் 23, மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இந்த ஆண்டில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்த தடம் படம் பெரும் வெற்றியை பெற்றது. இப்போது அவர் நடித்த சாஹோ படத்தின் மூலம் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ள அருண் விஜய் தனது அடுத்த படமான “மாஃபியா” படத்தை முடித்துவிட்டார். மேலும் அவர் நடிப்பில் “அக்னி சிறகுகள்”, “பாக்ஸர்” படங்கள் விரைவில் முடிக்கப்படும் நிலையில் உள்ளது.

கையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை!

இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்!

Vivek: கவர்ச்சியில் குதித்த நடிகைக்கு உதவி கேட்ட விவேக்!

இந்த நிலையில் ஹரிதாஸ் படத்தை இயக்கிய இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட இதுவரை இல்லாத வகையில் புதிவகை பாணியிலான திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார் அருண் விஜய். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை Movie Slides Pvt Ltd நிறுவனம் தயாரிக்கிறார்கள். செப்டம்பர் மத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. நெஞ்சமுண்டு நேர்மயுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தடம் படத்தில் அருண் விஜய்யுடன் பணிபுரிந்த கோபி ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்