ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு, நடிப்பதற்கு லாபத்தில் பங்கு கேட்டு புதிய கண்டிஷன் போட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வந்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்திற்கு மாநாடு என்று டைட்டில் வைக்கப்பட்டது. அதோடு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
இதற்கிடையில், படமே இன்னும் தொடங்கப்படாத நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள உனக்கு நான் வேண்டான் டி என்ற முதல் சிங்கிள் டிராக் லீக்காகியுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள யுவன் சங்கர் ராஜா பாடல் லீக்கானது உண்மையில்லை என்றும், அது தன்னுடைய பாடல் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு, இப்படத்தைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் சாதாரணமாக இல்லை. இப்படத்தில் நடிப்பதற்கு முன்கூட்டியே ரூ.6 கோடியை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டதோடு, லாபத்தில் பெரிய பங்கு தர் வேண்டும் என்றும் கூறி ஒப்பந்தம் போட்டுள்ளாராம். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை கன்னட படமான முப்தி படத்தை இயக்கிய நாரதன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வந்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்திற்கு மாநாடு என்று டைட்டில் வைக்கப்பட்டது. அதோடு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
இதற்கிடையில், படமே இன்னும் தொடங்கப்படாத நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள உனக்கு நான் வேண்டான் டி என்ற முதல் சிங்கிள் டிராக் லீக்காகியுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள யுவன் சங்கர் ராஜா பாடல் லீக்கானது உண்மையில்லை என்றும், அது தன்னுடைய பாடல் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு, இப்படத்தைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் சாதாரணமாக இல்லை. இப்படத்தில் நடிப்பதற்கு முன்கூட்டியே ரூ.6 கோடியை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டதோடு, லாபத்தில் பெரிய பங்கு தர் வேண்டும் என்றும் கூறி ஒப்பந்தம் போட்டுள்ளாராம். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை கன்னட படமான முப்தி படத்தை இயக்கிய நாரதன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.