ஆப்நகரம்

திருமணத்திற்குப் பின் நாக சைதன்யா - சமந்தா மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்!

நாக சைதன்யா & சமந்தா திருமணத்திற்குப் பின்னும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

TNN 28 Aug 2017, 6:40 pm
நாக சைதன்யா & சமந்தா திருமணத்திற்குப் பின்னும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil after marriage naga chathanya and samantha pair act together
திருமணத்திற்குப் பின் நாக சைதன்யா - சமந்தா மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்!


சமந்தா, நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. முன்னதாக இவர்கள் இருவரும், ‘யே மாயா சேசாவே’ தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அதன்பிறகு ‘மனம்’, ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இந்தப் படங்களில் நடித்தபோது இவர்களின் காதல் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது. மீண்டும் இந்த ஜோடியை இணைத்து நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயன்று வந்தனர். மாருதி என்ற இயக்குனருக்கு அதில் வெற்றி கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் இயக்குனர் மாருதி, நாக சைதன்யா, சமந்தாவிடம் ஒரு கதையை சொல்ல, அது இருவருக்கும் பிடித்தது. இருவரும் ஜோடியாக நடிக்க சம்மதித்திருக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

தமிழில் விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் இணைந்து நடித்துள்ள சமந்தா அதன் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்தார் அடுத்து சாவித்ரி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார். திருமணத்திற்குப் பின் மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்