ஆப்நகரம்

மீண்டும் இணையும் தனுஷ், செல்வராகவன் கூட்டணி!

செல்வராகவன் இயகத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 4 Sep 2019, 3:38 pm
செல்வராகவன் இயக்கத்தில் 6 வருடங்களுக்கு பிறகு ரிலீஸான படம் என்ஜிகே. சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த இப்படம் கடந்த சில மாதம் முன் திரைக்கு வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் உரிய வரவேற்பை பெறவில்லை.
Samayam Tamil Selvaraghavan


மிக நீண்ட காலத்திற்கு பின் ரிலீஸான செல்வராகவனின் படம் போதிய வரவேற்பு பெறாதது அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது. குழப்பமான திரைக்கதை, தொடர்பில்லா காட்சிகள் இப்படத்தின் மைனஸாக பார்க்கப்பட்டது.

ஹீரோவுக்காக கதையில் டூயட் சணடைக்காட்சிகள் என சமரசம் செய்து கொண்டது போல் இருக்கிறது என ரசிகரகள் கருத்து தெரிவித்தனர். செல்வா படங்களில் இது போன்ற விஷயங்கள் பொதுவாக இருக்காது. கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். செல்வா பழைய மாதிரி திரும்ப வரவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

வைரலாகும் நடிகையின் குளியல் வீடியோ!

நண்பர்களால் வளைகாப்பு கொண்டாடிய எமி ஜாக்சன்!

4வது முறையாக பெயரை மாற்றிக்கொண்ட சர்ச்சை நாயகி!

இந்த நிலையில் தனுஷுடன் அவர் இணைந்து படம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. இப்போது அந்த அதகவல் உறுதியாகியுள்ளது. செல்வராகவன் வாழ்வில் புதுப்பேட்டை படம் மிக முக்கியமான படமாகும். தனுஷுடன் அவர் இணைந்த "காதல் கொண்டேன்", "மயக்கம் என்ன" ஏனஅனைத்து படங்களும் நல்ல வரவெற்பை பெற்ற படங்களாகும். அந்த தனுஷ் செல்வராகவன் கூட்டணி தான் தற்போது மீண்டும் இணைய உள்ளது. தனுஷ் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறனுடன் அசுரன், இயக்குநர் துரை செந்தில்குமாருடன் பெரயரிடப்படாத படம், இயக்குநர் மாரி செல்வராஜிடன் ஒரு படம் என வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் இந்தாண்டு இறுதியில் முடிந்து விடும். இவ்வாண்டின் இறுதியில் செல்வராகவனுடனான படம் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய தனுஷ் இதனை தெரிவித்துள்ளார். செல்வராகவனுடன் இவ்வாண்டு இணைந்து ஒரு படத்தில் இணைய உள்ளதாக தெரிவித்திருந்தார். தனுஷ் செல்வராகவன் இணையும் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார். யுவன் சங்க்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய இந்தக் கூட்டணி படம் செய்வது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் பழைய செல்வராகவன் இப்படம் மூலம் மீண்டு வருவார் என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்