ஆப்நகரம்

இவரது இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவா?

தமிழில் அஜித், விஜய் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் தந்து இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா நடிகராக இப்போது வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.

Samayam Tamil 21 Aug 2019, 2:33 pm
சமீபத்தில் மான்ஸ்டர் என்று மாபெரும் வெற்றிப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் எஸ்.ஜே சூர்யா. இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.
Samayam Tamil SJ Surya Radha Mohan


"மான்ஸ்டர்" படத்தை இயக்குநர் நெல்சன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கோகுல் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் இப்படத்திற்கு எடிட்டிங் செய்திருந்தார். இப்படம் மே மாதம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டித் தந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா, இறவாக்காலம் மற்றும் உயர்ந்த மனிதன் என்று இரண்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் ராதா மோகனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

மேலும் படிக்க: தல 60 படத்திற்காக தயாராகி வரும் அஜித்: வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கி வெற்றிப் பெற்றிருந்தார்.

இதையடுத்து நியூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமாகி அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பின் வரிசையாக சில தோல்விப் படங்கள் அவரை சோகத்தில் ஆழ்த்தியது. "இறைவி" என்ற படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

அதன் பிறகு "ஸ்பைடர்" மற்றும் "மெர்சல்" படங்களின் மூலம் வில்லனாகவும் நடித்து பல விருதுகளை அள்ளினார். தற்போது உயர்ந்த மனிதன் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இனைந்து நடித்து வருகிறார்.

இவர் நடித்து இயக்கிய படங்கள் அனைத்தும் A சர்டிஃபிகேட் படங்களாக வயது வந்தவர்கள் பார்க்கும் படங்களாக இருக்கும். எஸ்.ஜே. சூர்யாவின் பிம்பமும் அது போலவே இருந்து வந்த நிலையில் இப்போது அவர் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோவாக மாறி வருகிறார்.

Also Read This: கௌசல்யா கிருஷ்ணமூர்த்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்: தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்!

அதன் அடுத்த கட்டமாக தரமான குடும்ப படங்களை தரும் இயக்குநர் ராதா மோகனுடன் இணைந்துள்ளார் எஸ்.ஜே சூர்யா. "அழகிய தீயே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராதா மோகன். இந்தப் படம் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும், பயணம், காற்றின் மொழி என்று நிறைய வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார் ராதா மோகன். இவர் தற்போது எஸ்.ஜே சூர்யாவை வைத்து படம் இயக்கப் போவதாக செய்திகள் உலா வருகின்றது.

இதையும் படிங்க: Indian 2 Update: முதல் முறையாக கமலுடன் இணையும் விவேக்!

இப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருகிறது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்