ஆப்நகரம்

'கருடா' படத்துக்கு பிறகு தான் 'சாமி 2'?

சீயான் விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் படமான 'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

TNN 5 Aug 2016, 6:07 pm
சென்னை: சீயான் விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் படமான 'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil after only garuda vikram will start saamy 2
'கருடா' படத்துக்கு பிறகு தான் 'சாமி 2'?


இந்நிலையில், 'சாமி 2' படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள விக்ரமின் 'கருடா' படத்தை முடித்த பிறகு சாமி 2 படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாகவுள்ள 'கருடா' படத்தை முடிக்கும் வரை ஹரி காத்திருப்பதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியீட்டுக்காக காத்திருக்கும் விக்ரமின் 'இரு முகன்' படத்துக்கு முன்னதாகவே 'கருடா' படம் அறிவிக்கப்பட்டது. இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவிருந்த இப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனதையடுத்து விக்ரம் 'இரு முகன்' படப்பிடிப்பில் நடிக்க தொடங்கினார்.

தற்போது, நடிகர் விக்ரம் 'கருடா' படத்தின் பணிகளை துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம் தான் நடிக்கக் வேண்டும் என ஓராண்டு வரை இயக்குனர் திரு காத்திருந்ததாலும், நடிகர் விக்ரம் ஏற்கனவே முன்தொகை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்